நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544ஆக அதிகரிப்பு!

1599191154 death corona 2
1599191154 death corona 2

கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544ஆக அதிகரித்துள்ளதுடன் இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் விபரங்கள்

பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளார். சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். வத்தளை பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 96 வயதான பெண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் கடந்த 10ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நோற்றையதினம் 298 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89 473 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 86 227 பேர் குணமடைந்துள்ளதோடு , 2564 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதே வேளை 8 இலட்சத்து 15 585 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது