நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

Rainning
Rainning

நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படலாம் என்பதோடு இடியுடன் கூடிய மழையின் போது, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை கையாளுமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.