சர்வதேச பெண்கள் தினநிகழ்வு சிதம்பரபுரத்தில் இடம்பெற்றது.
உழைக்கும் பெண்களே ஒன்றுசேருங்கள்,உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுங்கள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச பெண்கள் தினநிகழ்வு சிதம்பரபுரம் உதயம் சனசமூகநிலைய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
பெண்விடுதலை சிந்தனை அமைப்பின் இணைப்பாளர் செ,ஆனந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை அமைப்பின் தலைவர் பி.மோகனதர்சினி ஆற்றினார்.
நிகழ்வில் சிதரம்பரபுரம் கிராமஅபிவிருத்திசங்கத்தின் பொருளாளர் சு.செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ம.மகேந்திரன், பெண்விடுதலை சிந்தனை அமைப்பின் செயலாளர் பி.பிரசாந்தினி உறுப்பினர், டிலக்சினி சயித் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.