கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

720x380 1 720x380 1
720x380 1 720x380 1

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 6 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க பகுதிகளிலும், சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இன்று காலை 9 மணிமுதல் 6 மணிநேர காலப்பகுதிக்கு குறித்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது