மொரவெவ பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் இடைநிறுத்தம்

fbb259a6 unp
fbb259a6 unp

திருகோணமலை – மொரவெவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் மொரவௌ பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமை, கட்சியின் ஒழுங்கு விதிகளையும் நெறிமுறைகளையும் மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த இரண்டு பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி யாக்கூப் தம்பி ஜெனீர்தீன் மற்றும் ஆர்.எம்.எஸ்.விஜயசிங்க ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தின் பிரதி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.