இலங்கையில் கொரோனா தடுப்பூசி இதுவரை 8 இலட்சத்துக்கும் அதிக மானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.