ஒரு இலட்சம் இளையோருக்கு தொழில் வாய்ப்பு!!

President Flag
President Flag

ஒரு இலட்சம் இளையோருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திணைக்களம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரச மற்றும் அரசிற்குட்பட்ட நிறுவனங்களின் பயிற்சியற்ற தொழில் வாய்ப்புக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதனை சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட குழுவினருக்கு அரசியல் மற்றும் ஏனைய அனுசரனைகளின் அடிப்படையில் அல்லாது பெற்றுக்கொடுக்கும் முகமாக ஜனாதிபதி குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவைக் கொண்ட திணைக்களத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதியளவில் இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.