நகரை அழகுபடுத்தும் மட்டு இளைஞர்கள்!!

batticaloa
batticaloa

இலங்கையை அழகு படுத்தும் தொனிப் பொருளின் கீழ் மட்டக்களப்பு இளைஞர்கள் நகர் பகுதியில் வர்ணம் பூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக நகர் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியின் மதில் சுவரிற்கு வர்ணம் பூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரத்தையும் திறைமைகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் இளைஞர்களின் இச் செயற்றிட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.