கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து 15 அமைச்சர்களைக் கொண்ட காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அமைச்சு பதவிகளில் பாதுகாப்பு அமைச்சு மட்டும் எந்த உறுப்பினருக்கும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுப்பதவி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யார் பாதுகாப்பு அமைச்சர் எனும் கேள்வி எழுந்திருந்த நிலையில் மங்கள சமரவீரவும் டுவிட்டரில் இதே கேள்வியினை எழுப்பியிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட்டபோது, அதன் தலைப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சரவை நியமனத்தில் பின்னர் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமே உள்ளதாக செய்திகள் வெளியானபோதும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அதனை மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.