திருகோணமலை – மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை காவற்துறையினர், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.