வவுனியாவில் பொது சுகாதார பரிசோதர்களினால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஐந்திற்கு மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 650க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் டெங்கு நோய் பரவும் நிலையில் காணப்பட்ட நெல் களஞ்சியசாலை, இலங்கை மின்சார சபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அரச விடுதிகள், பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றிக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கெதிரான வழக்கு இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.