பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் உதவி

news 1
news 1

வன்னியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினரால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள், பால்மா, நுளம்பு வலை, பாய் போன்றவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியுடன் இச் செயற்றிட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தேசிய கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.