பொலன்னறுவை, தெஹியத்த கண்டி பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பெண்ணொருவரும் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரலகன்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த தரம் 02 இல் கல்வி பயிலும் மாணவனும், அவரது 25 வயது தாயாரும் சிகிச்சைக்காக தெஹியத்த கண்டி பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவியை பாடசாலை அழைத்து செல்லும் வேளையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.