யாழில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான விசேட கருத்தரங்கு

2e1c22bc 601f 43ea bba0 3ad71220813d
2e1c22bc 601f 43ea bba0 3ad71220813d

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் தென்மேற்கு ( சண்டிலிப்பாய் ) பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும், சண்டிலிப்பாய், வழிகாட்டி நிறுவனமும் இணைந்து நடாத்திய இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முனைவோரிற்கான வழிகாட்டலும், சுய விவரக்கோவை தயாரித்தலிற்குமான கருத்தரங்கானது நேற்று(28) வழிகாட்டி நிறுவனத்தின் கட்டிடடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு.ஜெபநெசன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் றஜீவன் மற்றும் வளவாளராக திரு.செந்தில் குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் அதிகளவான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடதக்கது.