சப்ரகமுவ, மேல், மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் இன்று (30) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.