ஜெனிவா தீர்மானத்திற்கு பின்னர் அரசாங்கம் தமிழர்களை பழிவாங்குகிறது

பிரேமச்சந்திரன்
பிரேமச்சந்திரன்

ஜெனிவா தீர்மானத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடு தமிழ் மக்களை பழிவாங்குவது போன்றே அமைந்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு ஜெனிவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கூறும் கருத்து ஏற்புடையது அல்ல என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.