மல்வத்து ஓயா நீர்த்திட்ட அமைப்புப் பணி இன்று ஆரம்பம்!

malwathu oya
malwathu oya

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நீர்விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் மல்வத்து ஓயா நீர்த்திட்ட அமைப்புப் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும். அனுராதபுரம் தந்திரிமலையில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.