யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா!

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர். ஏனைய 3 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரி. ஏனைய ஒருவர் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்படவர்கள். மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.