மட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – மூவர் பிணையில் விடுதலை

batti hospital
batti hospital

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக வைத்தியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புற்று நோய் தாக்கத்திற்குட்பட்ட குறித்த சிறுமிக்கு வழமைக்கு மாறாக அதிக மருந்தினை கொடுத்தமையின் காரணமாக 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கினைவிசாரித்த நீதிபதி இவ்வாறான சம்பவம் இனி வைத்தியசாலையில் இடம்பெறக் கூடாது என சுட்டிக்காட்டி பல எச்சரிக்கையின் மத்தியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சந்தேக நபர்கள் இழப்பீடு வழங்குவதாக ஏற்றுக் கொண்டதையடுத்து 3 வரையும் எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்