யாழ்.உரும்பிராயில் வாள்வெட்டுக்குழு வன்முறை!

IMG 0758
IMG 0758

யாழ்ப்பாணம் உரும்பிராய் – அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்றிரவு வாள்களுடன் புகுந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவையும் அடித்து நொருக்கிவிட்டுத் தப்பியோடினர்.

கடந்த இரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நால்வரே இவ்வாறு அட்டகாசம் செய்துவிட்டு ஓடி மறைந்தனர். தாக்குதல் இடம்பெற்ற வீடு ஆட்டோ சாரதி ஒருவருடையது எனக் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்தின் பின்னரே அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.