முல்லைத்தீவு மாவட்டம் பாலியாற்றில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு உழவு இயந்திரத்தை ஆற்றில் இருந்து மேலே செலுத்த முற்பட்டவேளை உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி உழவு இயந்திரத்தில் சிக்குண்டு பலியானார்.
குறித்த விபத்தில் பலியாகியவர் மூன்றாம்திட்டம்,கல்விளான் ,துணுக்காயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து சுரேஷ்குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்