யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளின் தனியார் காணிகளில் அடாத்தாக மணல் அகழ்வு இடம்பெறுகின்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குறுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த பிரதேசங்களின் தனியார் காணிகளில் அடாத்தாக அளவிற்கதிகமான மணல் அகழ்வதாகவும் இதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி மகக்ளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.