உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகேயின் பெயர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயரிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா டிசம்பர் 4 ஆம் திகதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காலஞ் சென்ற ரஞ்சித் டி சொய்சாவுக்கு அடுத்த படியாக, அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை பெற்ற அப்போதைய ஐ.ம.சு.மு. வேட்பாளர் வருண லியனகே குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.