உந்துருளி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில், காவல்துறையினரால் கடந்த 31 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி முதல், முதலாம் திகதிவரையான காலப்பகுதியில், உந்துருளி விதி மீறல்கள் தொடர்பில், 8 ஆயிரத்து 957 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
295 உந்துருளிகள், காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மதுபோதையில் உந்துருளி செலுத்திய 264 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே, உந்துருளி செலுத்துநர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரியுள்ளார்.