நாட்டின் சில பகுதிகளில் வழமையை விட 4 பாகை செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு மாவட்டங்களிலும் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இரத்மலானை, கொழும்பு, காலி, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.