ஓமானில் இலங்கை தமிழ்ப் பெண் மீது துன்புறுத்தல்!!

mullaitivu1
mullaitivu1

ஓமன் நாட்டிற்கு சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு பாரிய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரை மீட்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு அளம்பிலை சேர்ந்த 36 வயதான செல்வகுமார் பிரியதர்சினி எனும் பெண் கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாக தெரிவித்து நசீர் எனும் நபர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்று ஓமான் நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த பெண் சட்டவிரோத ஆட்கடத்தல் நபர்களினால் ஓமான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு தான் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள குறித்த பெண் தன்னை மீட்டு இலங்கை வருவதற்கு வழிசெய்யுமாறு உறவினர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.