ஹெரோயின்- கஞ்சா போதைப்பொருளுடன் 9 பேர் கைது!

kaithu

நாட்டின் பல பிரதேசங்களில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் பெலிஅத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 21 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட குற்றப் புலனாய்வு பிரவினரால் பியகம சியபலாபே பிரதேசத்தில் 88 கிலோ கஞ்சவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் காவல்துறையினரால் உஸ்வெடகெயாவ பிரதேசத்தில் 20  கிராம் ஹெரோயினுடன் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.