விடுதலையாகின்றாரா பிள்ளையான் ?

1 ee 2
1 ee 2

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார் பிள்ளையான்.

இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளளையானை சந்தித்து நலன் விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.