கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு

0 a
0 a

கொழும்பின் 7 பிரதான பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை கொழும்பு 2 மற்றும் கொழும்பு 9 ஆகிய பிரதேசங்களில் குறைந்தளவிலான நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.