கோப் குழுவுக்கு அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் !

1 sunil
1 sunil

பாராளுமன்ற கோப் குழு மேலும் பலப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதன் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் அரச நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளின்போது வெளிப்படும் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் குறித்து உடனடியாக வழக்குத் தொடர்வதற்கு கோப் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

அமைச்சுக்கள் அனைத்தும் அரச கட்டிடங்களில் மாத்திரமே இயங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், அமைச்சுக்கள் மாத்திரமல்லாது அரச நிறுவனங்கள் அனைத்தும் அரச கட்டிடங்களில் முன்னெடுக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அரச நிறுவனங்கள் பல தனியார் கட்டிடங்களை பாரிய விலைக்கு குத்தகைக்கு எடுத்து அரச நிதியை வீணாக செலவளித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.