பசறை – பிபிலை வீதியை துரிதமாக புனரமைத்து தருமாறு கோரி லுணுகலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதி பொதுமக்களால் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை – லுணுகலை வீதியின் புனரமைப்புப் பணிகள் மிகவும் தாமதமான முறையில் இடம்பெறுவதாக மக்கள் இதன்போது குற்றம்சாட்டினர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு பிரவேசித்த லுணுகலை காவல்துறை பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் கலைந்து சென்றதாக தெரியவந்துள்ளது.