54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழா!

166716927 1881348315363808 3521312979399134273 n
166716927 1881348315363808 3521312979399134273 n

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

அனுராதபுரம் – ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழாவை விவசாயத்துறை அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.