மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

unnamed 42
unnamed 42

அக்கரப்பத்தனை – பசுமலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் மரணித்தார்.

கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் 43 வயதான தந்தை ஒருவரே மரணித்தார்.

அத்துடன் இதன்போது காயமடைந்த மேலும் இருவர் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.