மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

Josap 15 720x375 1
Josap 15 720x375 1

மறைந்த ஆயர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (05) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிம்மயா மிசன் சுவாமிகள் பங்கு தந்தையர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இனத்தின் குரலாக தன் இறுதிக்கணம் வரை சாட்சியமாய் சத்தியவழியில் பயணித்து மறைந்த ஆண்டகையின் அஞ்சலிப் பிரார்த்தனையில் பலரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.