போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

WhatsApp Image 2021 04 03 at 11.20.34 PM
WhatsApp Image 2021 04 03 at 11.20.34 PM

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 மற்றும் 45 வயதுடைய இரு பெண்களை பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனைப் காவல்துறையினர் மற்றும் சிறுவர் மகளிர் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் உதவியுடன் இரு பெண்களையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின் 23550 மில்லி கிராம் போதைப்பொருள் 60 போதை மாத்திரைகளும் மற்ற பெண்ணிடமிருந்து 17330 மில்லி கிராம் போதைப்பொருள் 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இவர்களுடன் தொடர்புடைய சம்பந்தேக நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.