ஹெரோயினுடன் மூவர் கைது

7 s 1
7 s 1

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலான, கொலன்னாவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4360 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அப்பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது