ஏப்ரல் 1 முதல் ஏழாம் திகதிவரை உணவு கையாளும் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் பத்திற்கும் மேற்ப்பட்ட வியாபார நிலையங்களிற்கெதிராக நீதிமன்ற வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
காலாவதித்திகதி முடிவடைந்த உணவுப்பொருட்கள், பாவனைக்குதவாத தானிய வகைகள், சுகாதார சீர்கேடான சாப்பாட்டு கடைகள் போன்றவை தொடர்பாக விசேடகவனம் செலுத்தியுள்ளோம்.
இன்றுவரை 22 வியாபார நிலையங்களிற்கு மேல் மேற்பார்வை செய்துள்ளோம். அவற்றில் 10 வியாபார நிலையங்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் வியாபார நிலையங்கள் மற்றும், உணவகங்களில் கையாள வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பாக அவற்றின் உரிமையாளர்களிற்கு கருத்தரங்குகள் மூலமாக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.