போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை!!

1 ee
1 ee

ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் புதுக்கடை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 60.73 கிராம் ஹெரோயின் மற்றும் 12.18 கிராம் கஞ்சாவுடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.