வடக்குமாகாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு

8 134
8 134

வடக்கில் அதிகரித்து வருகின்ற டெங்கு நோய்த் தாக்கத்தில் 7511 நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் மட்டும் 6267 பேர் இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இந்த டெங்கு நோய்த் தாக்கத்தால் வடக்கில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வருகின்ற டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார சேவைகள் பணிமணை அலுவலகத்தில் ஊடகவியிலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர்;

அண்மைக்காலமாக வடக்கில் டெங்கு நொயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆயினும் இந்த நோயின் தாக்கத்திற்குள்ளாகி வட மாகாணத்தில் 7511 பேர் இணம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் இணங்காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

6267 பேர் யாழ் மாவட்டத்தில் இணங்காணப்பட்டிருக்கின்றனர். அதே போன்று வவுனியா மாவட்டம் உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நோய்த் தாக்கம் உள்ளது. குறிப்பாக. யாழ்ப்பாண மாவட்டத்திலே எடுத்துக் கொண்டால் மாநகர பகுதி, நல்லூர் கோப்பாய் பகுதிகளில் தீவிரமாக உள்ளளது.

அதிலும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இதுவரைக்கும் 1591 நோயாளர்களும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 673 நோயாளர்களும் நல்லூர் 676 நோயாளர்களும் இணங்கானப்பட்டள்ளனர். அதே போன்று யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் கணிசமான அளவு நோயளளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளோம். பல கூட்டங்களை பல இடங்களிலும் நடாத்தியுள்ளளோம். ஆனாலும் இதில் எங்களுக்கு முக்கிய சவாலாக இருப்பது தினமக் கழிவு முகாமைத்துவம். திண்மக் கழிவு முகாமைத்தவதற்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவாக உள்ளது. இதனால் உள்ளுராட்சி சபைகள் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக இந்த நோய்த் தாக்கத்தால் வட மாகாணத்தில் வடக்கில் 4 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 3 இறப்புக்கள் யாழிலும் மன்னாரிலும் 1 இறப்பு என இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.