முதலையின் பிடியில் சிக்கி காணாமல் போயுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தை

wp4080148
wp4080148

திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்டபட்ட இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை பிடியில் சிக்குண்டு காணமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கழமை 9 .30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.திலகரட்ன தெரிவித்தார்.

குடி நிலம் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு முதலை பிடியில் சிக்கி நீரில் மூழ்கி காணமால் போயுள்ளார்.

இந்நிலையில், காணமல் போனவரை தேடும் பணி முன்னேடுக்கப்பட்டு வருவதுடன், மீட்பு பணிக்காக கடற்படையின் உதவியை நாடியுள்ளதாக திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.