யாழில் பிரபல கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!

011 3
011 3

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானதெனவும் அதில் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறியுமே அவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் சிலர் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.