தொடருந்து இயந்திர சாரதிகளும், தொடருந்து கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்தார்.
தொடருந்து திணைக்களத்தில், தொடருந்து பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.