இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 343 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 128 பேர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் 68 பேரும், கம்பஹாவில் 39 பேரும், இரத்தினபுரியில் 27 பேரும், குருநாகலில் 09 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மொனராகலையில் 08 பேரும், அம்பாந்தோட்டையில் 07 பேரும், காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 04 நோயாளர்கள் வீதம் பதிவாகியுள்ளனர்.
மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 03 பேர் வீதமும், மாத்தறையில் 02 பேரும், கண்டி, அநுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 34 பேரும் கொவிட் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.