மகளீர் தினத்தையொட்டிய சுயதொழில் முயற்சியாளர்களிற்கான கண்காட்சி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது!

News 09 04 16 1
News 09 04 16 1

மகளீர் தினத்தையொட்டிய சுயதொழில் முயற்சியாளர்களிற்கான கண்காட்சி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் குறித்தகண்காட்சியும், விற்பனையும் இன்று இடம்பெற்றது.

News 09 04 4

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண மகளீர் விவகாரம் தொழில்துறையும், தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் கலந்து கொண்டதுடன், கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜேயகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News 09 04 16


இதன்போது கிளிநொச்சி மாவட்ட தொழில் முனைவோர்கள் தமது உற்பத்திகளை கண்காட்சிக்காக வைத்திருந்ததுடன், விற்பனையிலும் ஈடுபட்டடனர்.

News 09 04 15