சுதந்திர கட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மைத்திரி

maithripala
maithripala

எதிர்காலத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாகவுள்ள அரசாங்கத்திற்கான தேசிய ஒற்றுமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் மைத்திர்பால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அமைப்பாளர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

பலமிக்க ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழப்பும் பொறுப்பு தொகுதி அமைப்பாளர்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.