பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை தவிர்ப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சின் மேலதிக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் கூடுதலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை இதற்கான காரணமாகும்.
பாதசாரிகளும் தமது சுய பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகும். கைத்தொலைபேசிகளில் உரையாடியவாறு வாகனங்களை செலுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.