மணியின் கைது: அமெரிக்கா கவலை!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது கவலையளிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.

“எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும்” என்றும் அந்தப் பதிவில் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.