மணல் அகழ்விற்கு நீர் வளச் சபையின் அனுமதி அவசியம் – வாசுதேவ நாணாயக்கார

நாணயக்கார

மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு நீர்வளச் சபையின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மணல் அகழ்வு மற்றும் கற்குவாரிகளை நடத்திச் செல்வதாயின் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதிப்பத்திரத்திற்கு மேலதிகமாக நீர்வளச் சபையின் அனுமதியும் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார குறிப்பிட்டார்.