குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சாவுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிஷாந்த டி சொய்சா, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.