வவுனியா,மருக்காரம்ளை கிராம அலுவலர் பிரிவில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று ஞாயிற்றுகிழமை 2021.04.11 ம் திகதி சுயாதீன தமிழ் இளைஞர்களின் குருதிக்கொடை நிகழ்வு சமயபுரம் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
மருக்காரம்பளை கிராம அலுவலர் நா.ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நிகழ்வில் வவுனியா பிரச செயலாளர் நா.கமதாசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
ஏராளமான இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பிற்பகல் 12 மணிவரை இவ் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.இவ் குருதிகொடையானது சமயபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், மணிப்புரம் கிராம அபிவிருத்தி சங்கம், இளங்கோ விளையாட்டு கழகம், அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம்,பாக்கியம் அறக்கட்டளை, சுயாதீன தமிழ் இளைஞர்கள்ஆகிய பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது
மேலும் இதில் பங்குபற்றிய குருதி கொடையாளர்களுக்கு “மனிதநேய மாண்பாளர்” பட்டம் வழங்கி சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.